Jun 12, 2009

நான் நானாகவே!



அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க..

சரி உங்க விதிய மாத்த முடியாது அனுபவிங்கன்னு நானும் போட்டாச்சு:))))


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பெருசா ஒரு காரணமும் இல்லங்க.. இது என் அத்தை வைத்த பெயர்.. ஆனால் பாருங்க விதி வலியது எனக்கு அவங்களை பிடிக்காது..

ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்:))

ஸ்கூலில் என்னை G.P.னு தான் கூப்பிடுவாங்க. இதுவும் பிடிக்கும்..

என் தம்பிக்கு போலவே எனக்கும் இன்னும் பல பெயர்கள் இருக்கு ஆனால் சொல்லமாட்டேனே :))


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

யாரைக் கேட்கறீங்க? என்னையா இல்லை எங்க வீட்டு ரங்கமணியையா?


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கையெழுத்து நல்லா இருந்தா தலை எழுத்து நல்லா இருக்காதுன்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காக.. எனக்கு தலை எழுத்து சூப்பரோ சூப்பர்......


4. பிடித்த மதிய உணவு என்ன?

தயிர் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும், என் அம்மாவின் கத்தரிக்காய் கறியும்..


5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நன்றாக பேசுவேன்.. அவ்ளோ சீக்கிரத்தில பிரண்ட் ஆயிடமாட்டேன்..


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

எனக்கு நீச்சல் நன்றாக தெரியும்.. சோ எங்க தள்ளி விட்டாலும் வந்திருவேன்:)


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.. பார்வையை வைத்தே சிலரின் எண்ணத்தை புரிந்து கொள்வேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

அடுத்தவங்க கிட்ட அவங்க மனசு கஷ்டப்படும்படி பேசிடமாட்டேன்.

அம்மாவிடமும் , என் துணையிடமும் யோசிக்காமல் கோபப்பட்டு பேசிவிட்டு பிறகு வருந்துவது:(


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

அவரை பிடிக்கும்.. அவர் செய்யும் எல்லாமும் பிடிக்கும், என் மீது கொள்ளும் கோபமும் பிடிக்கும்.

பிடிக்காதுன்னு சத்தியமா எதுவும் இல்லங்க..
ம்ம்ம்ம்ம் அவர் எனக்கு தெரியாம செய்யும் எதுவும் பிடிக்காது.. ஆனால் அப்படி செய்தாலும் சொல்லிடுவாக:)


10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் சகோதரி:(


11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

Red with Black


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கண்ணத்தில் முத்தமிட்டால்-- சட்டென நனைந்தது இதயம்


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு


14. பிடித்த மணம்?

பரிக்‌ஷித்தின் வாசனை


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

வெட்டிப்பயல் அண்ணா-- காரணம் அவர் எழுத்தும், என் மேல் கொண்ட பாசமும்

நாணல் .---- பிடிக்கும் காரணம் தெரியலை

விஜய்- காமெடியாக எழுதுவது நல்ல நண்பர்

சஞ்சய் அண்ணன்-- பிடிக்காது காரணம் என்னை அநியாயத்துக்கு திட்டி கமெண்ட் போடுவது :(


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

Roseன் கவிதைகள்:)

ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!!


17. பிடித்த விளையாட்டு?

செஸ்


18. கண்ணாடி அணிபவரா?

இதை தெரிஞ்ச்சுக்கிட்டு என்ன செய்வீங்கன்னு முதல்ல சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன்..( யப்பா புத்திசாலி தனமா ஒரு கேள்வி கேட்டாச்சு.. இதுக்குப் போயி மூளைய இந்த அளவுக்கு யூஸ் பண்ண வச்சிட்டாங்களே:()


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பேய் படம்னா ரொம்ப பிடிக்கும்:)
காதல், காமெடியும் பிடிக்கும்


20. கடைசியாகப் பார்த்த படம்?

கடைசியாக பார்த்ததுனா அருந்ததி
கடைசியாக பார்த்த புதுப் படம் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்..
கடைசியாக தியேட்டரில் பார்த்தது தசாவதாரம்


21. பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம்

(காலைல 7 மணி வரைக்கும் பெட்ஷீட்ட இழுத்துப் போர்த்திட்டு தூங்கும் சுகமே தனி! )


22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்போதைக்கு நமக்கு அந்தளவுக்கு நேரம் இல்லைங்க..


23. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

பரிக்‌ஷித்த போட்டோ புடிக்கும் போது எல்லாம் ::))


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பரிக்‌ஷித்தின் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம்:)

எங்கள் எதிர் வீட்டுப் பெண்மணியின் சத்தம் ( பிளாட்ல இருப்பவங்க உங்க எதிர் வீட்டில் குழந்தை ஏதும் இருந்தால் கூடுமானவரை உங்கள் தேவையில்லாத சத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்:( )


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

Delhi


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிறைய்ய்ய்ய இருந்துச்சு இப்போ மறந்து போச்சு):


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு டேக் செய்திருப்பது!!!


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நானே............ஒரு நல்ல பொண்ணு என் கிட்ட இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கப்பிடாது..


29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி ஊட்டி ஊட்டி


30. எப்படி இருக்கணும்னு ஆசை?

புரியலையே...


31. கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம்?

அவரில்லாம நான் மட்டும் தனியா சமையல் செய்யனும்னு தான் நினைக்கறேன்:(


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்வது கொஞ்ச்ச காலம், இருப்பதை வைத்து சந்தோசமாய் இரு..

Jun 9, 2009

நானா? நீயா?




நேரமோ
காலமோ
தெரியாமலோ
இல்லை
அறியாமலோ
உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!

May 20, 2009

எப்படி இருக்கு?

கொஞ்ச நாட்களா ஒரு சூப்பரான டெம்ப்ளேட் செட் பண்ணனும்னு ஒரு எண்ணம் என் மனசுல ஓடிகிட்டே இருந்துச்சு....

ஆனால் பாருங்க என்கிட்ட ஒரு ரொம்ப நல்ல்ல்ல பழக்கம் ஒன்னு இருக்கு:)))) நான் என்ன செய்யனும்னு நினைச்சாலும் பக்கத்தில யாராவது இருக்கனும்.... எதுக்குனு கேட்கறீங்களா????? ஹி ஹி வேற எதுக்குங்க இது ஓக்கேவா.. இது நல்லா இல்லைலனு போட்டு பெணாத்தி எடுக்கத்தான்... ஆனால் அவங்க ஓக்கேன்னு சொன்னா நல்லாயில்லன்னு சொல்லுவேன். நல்லாயில்லன்னு சொன்னா சூப்பர்னு சொல்லுவேன். இருந்தாலும் யாராவது இருக்கனும் நமக்கு.

நமக்குன்னு இருக்கவே இருக்காங்க ஒருத்தங்க... அவங்க மாட்டனும் இல்ல அப்போ தான இந்த மாதிரி ஏதாவது ஒரு வேலை செய்யமுடியும்.... எப்போ நம்ம கைல மாட்டுவாங்கனு காத்துகிட்டு இருந்தேன்....

அந்த பொன்னான நாள் இன்னிக்கிதான்றத நான் சொல்ல வேண்டியதில்லை என் டெம்ப்ளேட் மாறியிருப்பதை வச்சே கண்டுபிடிச்சு இருப்பீங்க:))

சரிங்க என் புராணத்த படிச்சிட்டு ஓட்டு போடாம போயிடாதீங்க...




டிஸ்கி 1: யாரும் நல்லாயில்லைனு சொல்லிடாதீங்க....
டிஸ்கி 2: அப்படி சொல்லமுடியாதே... அதான் அந்த மாதிரி ஒரு ஆப்சனே வக்கலை:))

May 18, 2009

வோடபோனுடன் பரிக்‌ஷித்



இப்போ ஒவ்வொரு நாளும் பரிக்‌ஷித்தின் குறும்பு அதிகமாயிட்டே போகுதுங்க. தூங்கும் போது மட்டும் தான் கையும் காலும் ரெஸ்ட் எடுக்குதுன்னு பார்த்தா அதுவும் இல்லை தூங்கி கிட்டே வித்தை காட்றார்:)


என்னதான் நான் பார்த்துகிட்டாலும் அவங்க அப்பாவைப் பார்த்தால் செல்லமாய் ஒரு சிணுங்கல் சிணுங்கி அவரை எடுக்க சொல்லி, அவர் எடுத்திட்டால் போதும் அப்படி ஒரு சிரிப்பும் கொண்டாட்டமும் வந்து குஷி ஆயிடறார்:) ஆனால் பாருங்க அந்த இடத்தில எனக்கு நோ வேல்யூ:((






வோடபோன் விளம்பரம் வந்துவிட்டால் அப்படியே அமைதியாக, சிரிச்சுகிட்டே அதையே கவனிக்கிறார். அது மட்டும் இல்லங்க நாங்களும் அதை பார்க்கிறோமானு எல்லோரையும் திரும்பி பார்க்கிறார்:) ஆதித்யா சேனலில் “ஆதித்யா பாரு”னு சொல்லி ஒரு குழந்தை சிரிக்கும் அந்த இடத்தில் இவரும் சிரிப்பார். இந்த விளம்பரம் மியூசிக் வந்திட்டால் அழுதுகொண்டு இருந்தால் கூட ஸ்டாப் பண்ணிட்டு பார்க்க ஆரம்பிச்சிடுவார்!


டெட்டிபியர்ன்னா ரொம்ப பிடிக்குது எனக்கில்லைங்க ...( எனக்கும் பிடிக்கும்ங்கறது வேற விசியம்) பரிக்‌ஷித்க்கு :)


அப்றம் ஒரு முக்கியமான விசியம்ங்க பின்னாடி பரிக்‌ஷித் ஒரு பெரிய்ய்ய்ய படிப்பாளியா வருவார்னு நினைக்கறேன் புக்ஸ்ன்னா ரொம்ப பிடிக்குது கண்ல பட்டிருச்சுன்னா அவ்ளோதான் அதை புரட்டி எடுத்து ஒரு வழி பண்ணிடுவார் டர்...டிர்..சர் என்ற சத்தங்களுடன்:))

May 15, 2009

நண்பர்களே! கொஞ்சம் சீக்கிரம்...

மக்கா நாங்களும் PITக்கு போட்டோ புடிச்சிருக்கோம்... கொஞ்சம் சீக்கிரம் செலக்ட்டி கொடுத்தீங்கன்னா சந்தோசப்படுவேன்:)


1)

2)

3)

4)

5)

6)

7)

8)

9)

10)

11)

May 9, 2009

50-50



ஹாய் பிரண்ட்ஸ்:)




காலைல நேரமா எழுந்து குளிச்சு போட்டோக்கு போஸும் கொடுத்திட்டு இருக்கேன்.......ஆனா பாருங்க போட்டோ எடுக்கிறவங்க தான்ன்ன்ன்....




படம் எடுக்கலாம்னு இருக்கிறவங்க என்னை இப்போவே புக் செய்துக்கோங்க.. அப்றம் நான் ரொம்ப பிசியா இருப்பேன்...




நான் அம்மா போலவே சமத்து!




தயிர் சாதம் யாருக்கு எல்லாம் வேணும்??




அப்பா, அம்மாவ ஒழுங்கா சாப்பாடு ஊட்டி விட சொல்லுங்க... சாப்பிடும் போதுகூட போட்டோ எடுக்கறேன்னு இம்சை பண்றாங்க:((


டிஸ்கி: 50 வது பதிவு ஸ்பெசலா இருக்கனும்னு ரொம்ப நாளா யோசிச்சு எழுதிகூட வச்சிட்டேன்.. ஆனால் அது இதை விட ஸ்பெசலா இருக்கும்னு தோனலை அதான் சஞ்சய் அண்ணா கேட்ட மாதிரி பரிக்‌ஷித்தின் படங்களையே போட்டுட்டேன்!

Apr 15, 2009

குறுஞ்செய்தி கலாட்டா-4




1)என் சகோதரனின் ஸ்பெசல் புலம்பல்

காஃபில சுகர் இல்லைனா
குடிக்க முடியாது

அது போல

கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது

இப்ப தெரியுதா நான் ஏன் படிக்கலனு:(

2) சன் டைரக்ட் DTH ரீமிக்ஸ்

இன் எக்ஸாம் ஹால்

B.C.A Stud: அரியர் எக்ஸாமா?

B.E Stud : ஆமா

B.C.A Stud: நான் 2 அரியர்.

B.E Stud : அட! என்னோடயது அதிகம் 11 அரியர்.

B.C.A Stud: மைக்ரோ பிராசஸர், M3 அரியர் இருக்கா?

B.E Stud : அத விட அதிகம் M1, M2, M3, சர்க்யூட் தியரி, கண்ட்ரோல் சிஸ்டம்ஸ்
எல்லாமே இருக்கு..

சரி எவ்வளவு நேரம் எக்ஸாம் எழுதுவே?

B.C.A Stud: 2 1/2 hrs மட்டுமே:)

B.E Stud : அட! இது உன்னுடையது அதிகம். 15நிமிடம் மட்டுமே:)))

டன் டனா டன்

3) மனைவி: இந்த வாரம் முழுதும் படம் பார்த்தோம்
அடுத்த வாரம் முழுதும் சாப்பிங் போலாங்க?

கணவன்: ஓக்கே.
அதுக்கு அடுத்த வாரும் முழுதும்
கோவிலுக்கு போவோம்.!

மனைவி: ஏங்க?

கணவன்: பிச்சை எடுக்கத்தான்..

4)”அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த
எனக்கு
பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை!”

காரணம்
அவள் பேசியது...


ENGLISH

பயபுள்ள
மூச்சி விடாம
பேசுறா!!

5) அழகான கவிதை:

”அழகே
அழகை
இரசிக்கின்றது!”

-என் கையில் கண்ணாடி.

நோ
நோ
அழப்பிடாது

வேணும்னா
நீயும்
ஃபார்வேடு பண்ணிக்கோ:)

Apr 14, 2009

வா(ல்)ழ்த்துகள்


அஞ்சா சிங்கம்
விரைவில்
பூரிக் கட்டைகளின்
பத்தாவது ஆயிரத்தை
தொட்டு நிற்கப் போகும்
தைரியசாலி!!
வால் அண்ணாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

Apr 8, 2009

நான் பாஸாயிட்டேன்...



கொஞ்ச நாளா என்னால சரியா வலை உலகப் பக்கம் வரமுடியலங்க:( யார் பதிவையும் சரியா படிக்கவும் நேரம் இல்லை. திங்கள் கிழமை என் உனக்கானவையே கவிதை யூத் விகடன்ல வந்தது கூட தெரியாதுன்னா பாருங்களேன்!!!

விகடன்ல இருந்து மெயில் ஏதோ வந்திருக்க மாதிரி இருக்கேனு செக் பண்ணினா உங்கள் கவிதையை திங்கள் கிழமை அன்று பப்ளிஸ் செய்திருக்கோம்னு இருக்கு:)))))

அடடே இது கூட தெரியாம இருந்திருக்கோமே தெரிந்திருந்தா பக்கத்து வீட்டில் இருக்கும் நாலு நல்லவங்களை அழைச்சிட்டு வந்து காட்டி பெருமைப் பட்டிருக்கலாம்னு ரொம்ப வருத்ததுடன் விகடனைப் பார்த்தால் என் கவிதையை இன்றும் போட்டிருக்காங்க:))))))))

சந்தோசத்தில காலும் ஓட மாட்டேங்குது கையும் ஓட மாட்டேங்குது ஏற்கனவே என்னோட குறுஞ்செய்தி கலாட்டா விகடன்ல வந்திருக்குன்னாலும் என்னோட கவிதை வந்திருப்பது இதுவே முதல் முறை!

நன்றி யூத் விகடன்:)

எல்லாரையும் கூப்பிட்டு காட்டிட்டோம் இல்ல :)
அப்படியே எங்க வீட்டிலும் ஒரு போனப் போட்டு சொல்லலாம்னு போன் செய்தா ”உனக்கு தான் வேற வேலையே இல்லைன்னா எனக்குமா”னு ஒரு இன்ஸெல்ட்:( இதெல்லாம் ஒரு மேட்டரா இது மாதிரி எவ்வளவு முறை கிரேட் இன்ஸெல்ட் எல்லாம் ஆயிருக்கு இதுக்கெல்லாம் நாங்க அசர்ர ஆளு கிடையாது விட்ரா விட்ரா சூனா பானா யாரும் பார்க்கலை மண்ணை துடைச்சுக்கோனு சொல்லிகிட்டே போனை வச்சிட்டோம் இல்ல!! ஹி ஹி...

Apr 5, 2009

கல்லறைபூக்கள்


அதோ
அவள் பயணப்பட
ஆயத்தமாகிவிட்டாள்...
’ஓடிச் சென்று
கட்டியணைத்து
என்னை விட்டு போகாதே’
என்று
கத்திக் கதறத்
தவியாய் தவிக்கிறது
மனம்...
கால்களும், கண்களுமோ
எட்டி நின்றே
பார்க்கிறது!

இதோ
செல்கிறாள் அவள்
சொந்தங்கள்
படை சூழ...
தடுக்கத் துணிகிறது
கைகள்
தடுமாறி தடம்புரள்கிறது
கால்கள்
பல ஆயிரம் ஊசிகள்
குத்துகிறது நெஞ்சில்
விழியிலிருந்து வழிகிறது
கண்ணீர்
இதைத் துடைக்கவாவது
வேண்டும் நீ எனக்கு!

அலறிக்
கூப்பாடு போடுகிறது
மனம்
உதடுகளோ அசையாமல்
புரிகிறது மெளனம்
இயலாமை என்னை
கூனிக் குறுக வைக்கிறது
இதயத் துடிப்பின் வேகம்
கூடிக் கொண்டே போகிறது
மெள்ள மெள்ள
கண்களில்
இருள் சூழ..
விலகிச் செல்லும்
உணர்வை
நன்றாகவே உணருகிறேன்!

இப்பொழுது
ஆத்மாவாய்
அவளை தேடி செல்கிறேன்...
சொந்தங்கள் அவளை
அடக்கி விட்டார்கள்
அழகாய்
வண்ண வண்ண
மலர்கள் அடுக்கிய
பெட்டியினுள்..
நானோ கிடக்கிறேன்
நடுத் தெருவிலே
நரிகள் தின்னும்
பிணமாய்!!

Mar 31, 2009

சீதாயணம்!!



நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!




அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!

Mar 27, 2009

வெட்டிப்பயல் அண்ணாவாச்சு நீங்களாச்சு!!

வணக்கம் மக்களே:)

ரொம்ப நாட்களா நாமளும் பிளாக்கரான கதையை சொல்லனும் சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்கேன் [ ஆமா உன்னை எல்லாம் இப்ப யார் இதை கேட்டாங்கன்னு சொல்லறீங்களா?? அப்படி சொல்றவங்க என் பதிவை 10 தடவை வாசிக்கனும். சரிம்மா தாயீ நான் எல்லாம் அப்படி சொல்லலைனு சொல்லறவங்களும் 10 தடவை வாசிச்சே தான் ஆகனும்:))) ]ஆனா பாருங்க நேரமே இல்லை அவ்ளோ பிசி( இந்த இடத்தில நீங்க இதை நம்பனும்)!!!

ஒரு 2 வருசமா நான் பிளாக் வாசிச்சு கிட்டு இருந்தேன். வாசிச்சிட்டுன்னா பல பிளாக்குகள்ன்னு நினைச்சிடாதீங்க. ஒரே ஒரு பிளாக் மட்டும் தான். அந்த பிளாக்கிற்க்கு தீவிரமான ரசிகை நான். தினமும் ஏதாவது புது போஸ்ட் வந்திருக்கான்னு செக் பண்ணுவதும், எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!!

அவ்ளோ அருமையான எழுத்தாளர்:))

அவரோட ஒவ்வொரு பதிவும் நன்கு ரசிக்கும் படி இருக்கும்.. இடையில இனி என்னால முதல் மாதிரி எழுத முடியாதுன்னு அறிவிச்சிட்டார். இப்போ திரும்ப வந்ததில என்னைப் போல உள்ளவங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே:)) சரி அடிக்க வந்துறாதீங்க அது யாருன்னு சொல்லிடறேன்

வெட்டிப்பயல் பாலாஜி அண்ணா தான் அது:))

இவர் பதிவை படிச்சுப் படிச்சுதான் ஏன் நாமளும் பிளாக் எழுதக் கூடாதுன்னு தோனுச்சு அதனால வந்த வினையைத் தான் இப்போ நீங்க எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கீங்க:)

அண்ணனின் பதிவில் எனக்கு மிகவும் பிடிச்ச தொடர்கதை
ஆடுபுலி ஆட்டம்

வயிறு வலிக்க சிரித்த நகைசுவை
மணல் கயிறு

மனதை உருக வைத்த சிறுகதை
முட்டாப்பய

என்னை இந்த அளவுக்கு எழுத சொல்லி ஊக்கப் படுத்திய நல்லவங்க 2பேர் இருக்காங்க. அவங்க யார்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன்......
அவங்களை நீங்க அடிச்சாலும் சரி, கடிச்சாலும் சரி அது உங்க பாடு....

இந்த பதிவை தொடரச்சொல்லி நான் அழைப்பது

பழமைபேசி அண்ணாச்சி

G3

இவங்க எப்படி பிளாக்கிற்க்குள் வாந்தாங்கன்னு அவங்களே சொல்லுவாங்க:)

Mar 25, 2009

குறுஞ்செய்தி கலாட்டா-3


1) இன்றைய தத்துவம்:

ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????

ஓக்கே ஓக்கே அழக்கூடாது....

2) உன் பெயரை
கேட்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்
உன் பெற்றோருக்கும்
கவிதை
எழுத தெரியும்
என்று!!!


இப்படிக்கு
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)


3) பறவைங்க எல்லாம் ஏன் வெளிநாட்ல இருந்து
இங்க பறந்து வருது தெரியுமா??

ஏன்????

ஏன்னா அது நடந்து வந்தா லேட்டாகும் இல்ல அதான்!!




4) டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??

விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)

டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!

5) பாப் கார்ன் ஃபிரை பண்ணும் போது ஏன் ஜம்ப் பண்ணுது தெரியுமா?

தெரியலையா!

நீங்க போய் அந்த சட்டில உட்கார்ந்து பாருங்க அப்ப தெரியும்..

6) இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க

பாவம்,

பேய் பயந்திரும்!!

Mar 23, 2009

இது எங்க ஏரியா தைரியமிருந்தா உள்ளே வா -1



நானும் சென்னை வந்ததிலிருந்து இந்த போஸ்ட்டைப் போடனும்னு நினைத்திட்டு இருக்கேன் ஆனால் பாருங்க நேரமே இல்லை. சரி சரி மேட்டரை சொல்லிடறேன்.

எங்க பிளாட்ல குட்டீஸ் நிறைய இருக்காங்க. சாயந்திரம் ஒரு 7 மணில இருந்து 9 மணி வரைக்கும் இவங்க ராஜ்ஜியம் தான். நானும் பரிக்‌ஷித்த தூக்கிட்டு இவங்க எங்க எல்லாம் ஓடறாங்களோ பின்னாடியே போயிடுவேன். பரிக்‌ஷித்திற்க்கும் இது தான் பிடிக்கிறது. வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:))

ஆனால் இதில் விசியம் என்னன்னா எங்க பிளாட்ல இருக்கிற மக்களை விட அவர்களின் குட்டீஸைத் தான் எனக்கு நல்லா தெரியும். இது வரைக்கும் மொத்தமா எவ்ளோ பிளாட் இருக்கு அதில் யார் இருக்காங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுங்க. கணக்கு போட்டுப் பார்த்தா ஒரு 8 வீடு தான் தெரியும்.

ஆனால் எல்லா குட்டீஸையும் நல்லா தெரியும். அவங்க அம்மாங்க எல்லாம் ஒரு நாள் கூட நம்ம பையன் விளையாடறான், பொண்ணு விளையாடறாள்னு மருந்துக்கு கூட எட்டிப் பார்த்ததில்லை. இத்தனைக்கும் அவங்க வேலைக்கு எல்லாம் போவதில்லை. வீட்டில் தான் இருக்காங்க. எப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!

இதில் ஒரு வீட்டில் அவங்க குட்டி எப்பவும் வெளில நின்னு கதவை தட்டுவது தான் வேலையே.. ஆனால் அடைத்த கதவு அடைத்தது தான் திறக்கவே மாட்டாங்க.. இதை நினைத்து சிரிக்கறதா?? அழறதா??

சரி இது எல்லாத்தையும் விட்டுட்டு நாம இந்த மழலைகள் செய்யும் வாலுத் தனத்தை பற்றி பேசுவோம்..




வீக் எண்ட் வந்திட்டா போதும் அவ்ளோ தான் ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து ஆரம்பிச்சா பசிக்கும் வரை ஓரே ஆட்டம் தான். இந்த வாரம் வெள்ளிக்கிழமை நான் 7 மணி வாக்கில் வீட்டினுள் இருந்து பரிக்‌ஷித்த தூக்கிட்டு வெளில வந்தேன். ஓரே மழலைகள் கூட்டம் இதில் ஆச்சரியமான விசயம் என்னன்னா படிக்கட்டுகளில் உட்கார்ந்திட்டு இருந்ததுதான் (ஏதும் செய்யாமல் உட்கார்ந்திட்டு இருப்பதுனா அதில ஏதோ இருக்கு அதாவது யாரோ வசமா அவங்க கிட்ட மாட்டிகிட்டாங்கன்னு அர்த்தம்). என்னதான் நடக்குதுன்னு பக்கதில போய்ப் பார்த்தா ஒரு அக்கா மாட்டிகிட்டாங்க எல்லோருக்கும் நடுவுல. எல்லோருக்கும் மெஹந்தி போட்டு விட்டுட்டு இருந்தாங்க. பாப்பாவுக்கும் போட்டு விடுங்கன்னு அதில் ஒரு பிஞ்சு பரிக்‌ஷித் கையைப் பிடிக்க இவன் வீல்னு கத்த அப்றம் அந்த குட்டியே தன் பந்தைக் கொடுத்து இவரை சமாதனப்படுத்தினதுதான் ஹைலைட்:)))

தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னமா கேள்வி கேட்கிறாங்க... ஏன் வாயில் வைக்குது?? எதுக்கு?? நீங்க வேண்டாம்னு சொல்லுங்க இல்லைன்னா நான் சொல்லறேன்..(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((() இன்னொரு குட்டி நானும் தான் வாய்ல விரல வைக்கறேன் நானெல்லாம் மெஹந்தி வைக்கலையா????

இல்லப்பா தம்பி மெஹந்தி போட்ட பிறகு வாயில விரலை வைத்தா இது எல்லாம் வயித்துக்குள்ள போகும் இல்ல அதான் - நான்

ஏன்????? வயித்துக்குள்ள போனா என்னா???? - குட்டீஸ்

வயிறு வலிக்கும் - நான்

ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???

டிஸ்கி: இன்னும் நிறைய வால் தனங்கள் இருக்கு. அதையும் போட்டா பதிவு ரொம்பபபபப் பெருசா இருக்கும். இது வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி.....

Mar 20, 2009

ஒய்யாரக் கவிதை...





உனக்கான -என்
கவிதைப் புத்தகத்தில்
பக்கங்கள்
திரும்பிக் கொண்டிருக்கின்றன...
ஆனால்
என்னவனே -உன்னைப்போல்
ஒய்யாரக் கவிதை
ஒன்றுமேயில்லை!




HAPPY BIRTHDAY SARAVANA!

With Love

POORNIMA








Love you Dad!

PARIKSHITH

Mar 16, 2009

உனக்கானவையே...



உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!



இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!



என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....



ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....

Mar 4, 2009

ஆ..ஆஆ..ஆஆஆ..ஆஆஆஆஆஆ

காலையில் எழும் பொழுதே தெரிந்தது மனதில் ஏதோ மாற்றம், என்னவென்று பார்த்ததில் எக்ஸாம் பீவர் என்று தெரிந்தது... அறக்கப் பறக்க கிளம்பும் பொழுது கைகள் தான் வேலையைச் செய்கிறதே தவிர மனதில் வேற என்ன என்னவோ ஓடிக் கொண்டிருக்கிறது..

அம்மாவின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அன்று செல்லும் போது அம்மா உடன் இருந்தாங்க.. இப்போ என்னடானா அவங்க பாட்டுக்கு ஊருக்குப் போயிட்டாங்க.
சே... நான் என்ன செய்வேன் ஏது செய்வேன்னு தெரியலையே!! மாமியார் தான் கூட இருக்காங்க.. இருந்தாலும்.... இவ்ளோ நாளா அம்மா வீட்டிலேயே இருந்தாச்சா, அம்மா கூட இருக்கும் போது என்ன கவலைங்கற தைரியதில இருந்திட்டேன்.. ஒரு வேளை என் மாமியார் என்னை விட பயந்தகொள்ளியா இருந்திட்டா அதான்..

அச்ச்ச்ச்சோசோசோஓஓஓஓஓ..
பைத்தியமே பிடிச்சுக்கும் போல இருக்கே..

போடு போன ரங்கமணிக்கு
டிரிங் டிரிங் டிரிங்

“ம்ம்ம் சொல்லு”

“ம்ம்ம்ம் ம்ம்ம்ம்”

“என்ன சீக்கிரம் சொல்லு வேலை இருக்கு. இங்க வந்தாலும் நிம்மதியா இருக்க விடமாட்டியா!!!”

“எல்லாம் என் நேரம். கிளம்பிட்டு இருக்கோம். எனக்கு....எனக்கு.. பயமா இருக்குபா:(”

“அதான் அம்மா கூட இருக்காங்க இல்ல, அப்புறம் என்ன! இதுக்கு தான் போனா?? சரி வைய்யு எனக்கு வேலை இருக்கு”

“ம்ம்ம்:((((”

ஒரு வழியா நாங்க 2பேரும் கிளம்பி, தூங்கிக் கொண்டிருந்த பரிக்‌ஷித்தை எழுப்பி, டையேப்பரைக் கட்டி விட்டு, பவுடர் போட்டு, டிரஸ் மாத்திவிடுகையில் அழகாய் ங்கு.. ங்கனு சிரிக்கையில் மனதில் எங்கோ ஒரு மூலையில் வழித்தது..

”ஐ லவ் யூடா செல்லக் குட்டி” என்று ஒரு முத்தம் வைத்து தோளில் சாய்த்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு கிளம்பினோம்.

டாக்ஸியில் செல்லும் பொழுது பரிக்‌ஷித் நன்கு சிரித்துக் கொண்டு சாலையை வேடிக்கைப் பார்த்தபடி குதூகலச் சிரிப்புடன் குதித்த படி குஷியாக இருந்தான்!!!! நான் தான் தேவை இல்லாமல் கவலைப் படுகிறேனோனு தோனுச்சு....

வலது பக்க அம்புக் குறியுடன் ஸ்டெர்லிங் ரோடு என்ற பலகையைப் பார்த்தவுடன் என் அருமைத் தம்பி, உடன்பிறவாச் சகோதரன் வானவில் வீதி கார்த்திக்கின் நினைவு வந்தது. இங்க தான் எங்கயாவது சுற்றிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொண்டேன்...

12 மணிவாக்கில் சைல்ட் ஹாஸ்பிட்டல் சென்றடைந்தோம். எங்க டாக்டர் கிட்ட போனதும், அவர் ஒரு குட்டி பாப்பாவை பார்திட்டு இருந்தார். அந்த பாப்பா அழுதிட்டு இருந்துச்சு. திடீர்னு பரிக்‌ஷித் ’ம்மானு’ அழ ஆரம்பிச்சிட்டார். பக்கதில இருந்தவங்க எல்லாம் என்னாச்சுனு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! பாவம் அவங்களுக்கு எப்படி தெரியும் எந்த குழந்தை அழுதாலும் இவரும் அழுவாருன்னு:(... டாக்டர் கிட்ட குட்டி வெயிட் ஏற என்ன செய்யனு கேட்டிட்டு, வேக்சின் போடும் ரூமிர்க்கு அவர் அனுப்பி வைக்க... ஆ!! வந்திருச்சுடா நான் பயந்து கொண்டிருந்த அந்த ஊசி..............பேந்த பேந்த முழித்துக் கொண்டு அங்கிருந்த ஹெட் நர்சிடம் சென்றோம். அவர் எந்த ஊசி போடனும், எது போட்டிருக்கு என்று கேட்ட கேள்விக்கு உளரிக் கொட்டி இம்முனிசேசன் ரெக்கார்ட எடுத்து நீட்டி” ஓ!! ஈஸி பைவ் ஆ”னு கேட்டதற்க்கு ஆமாம்னு சொன்னேன்.

அங்க வேற ஒரு குட்டி பாப்பாவிற்க்கு ஊசி போட மெடிசின் எடுத்து கிட்டு இருந்தாங்க.. அட ராமா நான் ஊசினாவே 10மைல் தூரத்துக்கு திரும்பி பார்க்காம ஓடர ஆளு!! என் மகனுக்கு குட்டீஸின் அழுகையைக் கேட்டால் அவர் அழுகையை நிப்பாட்ட நாலு நாள் ஆவும்.. இது என்னடா வம்புன்னு வெளிய ஓடிட்டோம்.

சரி உன் மகனுக்கு ஊசி போடையில என்ன செய்வேனு மாமியாரு கேட்க்க நீங்க இருக்கும் போது என்ன கவலைனு நான் சொல்ல.. சரி சரி வானு உள்ளார இழுத்திட்டு போயிட்டாங்க..

பரிக்‌ஷித்திர்க்கு ஊசிய ரெடி பண்ணிட்டு இருக்கையிலேயே தூரமா போய் நின்னுட்டேன்.......’ம்மாஆஆ’னு கத்தினான்.. 10 செக்கண்ட்ல அழுகையை நிறுத்திட்டான்... அட தங்கமே அவ்ளோதான்னு அப்புறம் அவனை கொஞ்சவும்.,

“இதுக்கு போய் இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணிட்டியே நீ! ஊசி உனக்கா இல்லை அவனுகானு எனக்கே சந்தேகம் வந்திருச்சு”ன்றாங்க மாமியார்....


Mar 3, 2009

அழகுன்னா இதுவல்லவோ!!!


முன்னாடி நான் அழகுன்னா என்னனு கேட்டிருந்தேன்.. அதர்க்கு பதில் பதிவான இதில் பாருங்க அழகை!!

How sweet? அழகுச் செல்லம்..
முட்டைக் கண்ணு..

உம்முன்னு இருக்கும் போதும் சரி,
அப்பா ஏம்ப்பா என்ன விட்டுட்டு டெல்லிக்குப் போயிட்டீங்கனு பேசும் போதும் சரி, அப்பாகிட்ட இருந்து போன் வந்துதான்னு கேட்கும் போதும் சரி எவ்ளோ முக பாவனைகள்!!!
பார்க்க பார்க்க சலிக்கவில்லை.. சேனலை மாற்றும் போது எந்த சேனலில் இது ஓடினாலும் இதைத் தான் பார்கிறேன்.

யாருக்கும் தெரியாமல் போனை சட்டையில் வைத்துக் கொண்டு மறைந்து மறைந்து செல்வது அழகோ அழகு... BGM கலக்கல்))

சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:(

Feb 26, 2009

பாருங்கப்பு....



அழகு?????

அழகு என்பது????

மு.கு: படத்தை பார்த்திட்டு அப்படியே சொல்லீட்டும் போங்கப்பு..

Feb 24, 2009

அம்மாக்களே...



அமிர்தவர்ஷிணி, சந்தன முல்லை, இன்னும் மற்ற வலைப்பூ அம்மாமார்களே பரிக்‌ஷித்திர்க்கு 6 மாதங்கள் ஆயிற்று.. அவருக்கு சாப்பிட என்ன தரலாம்னு உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.. எங்கள் மருத்துவரிடமும் கேட்டிருக்கிறேன், இருந்தாலும் அனுபவசாலிகளிடம் கேட்டுக்கலாம்னு தான்..

Feb 20, 2009

ஒரே கொண்டாட்டம் தான் போங்க :)))

படம் மேல் கிளிக்கி பெருசாக்கி பார்க்க!













எல்லாம் சென்னை வந்த பிறகு எடுத்தது தான்.. நாங்க ரொம்ம்ம்ம்ப நல்லவியலாக்க..... க்க்க்க்க்க்க்க்க்கும்!!!

Feb 18, 2009

குறுஞ்செய்தி கலாட்டா-2


இது எப்படி நம்ம கைக்கு கிடைச்சுதுன்னு தெரியாதவங்க இங்க போய் பாருங்க..

1) ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???

ஏன்னா அவ பேரு அமராவதி
:))

2) அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!

வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!


3) தனுஷ் : ஐயோ எல்லோரும் என் படத்த சிடில பாக்கறாங்களே:(

விஜய் : அட போய்யா, உன் படத்தையாவது சிடில பாக்கறாங்க என் படத்த போஸ்ட்டர்ல கூட பாக்கமாட்டேங்கறாங்க !!

4) பிரின்சிபால் : ஏன்டா லேட் ??

ஸ்டுடண்ட் : பைக் பஞ்சர் சார்.

பிரின்சிபால் : பஸ்ல வரலாம் இல்ல?

ஸ்டுடண்ட் : பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்ல சார்!!

5) குங்குமம் இந்த வாரம்..

'அரியர் வைக்கும்
மாணவச் செல்வங்களுக்கு
பல்சர் பைக்'!!
டாக்டர் கருணாநிதி அறிவிப்பு...

'அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
டி.ஆர் ஆவேசம்..

'இந்த செம்மில் அரியர் இல்லாதவர்களுக்கு
வில்லு படம் டிக்கெட் இலவசமாக தருவார்'
விஜய் கொலை மிரட்டல்..

'சிக்சர் கூட அடிக்காம இருந்திருவேன்
அரியர் இல்லாம இருக்க மாட்டேன்'
மனம் திறக்கிறார் டோனி...

இந்த இதழ் உடன் B.E. சர்டிபிகேட் இலவசம்..
வாங்கிடுவீர்களா இப்போது விற்ப்பனையில் குங்குமம்!!!