
கொஞ்ச நாளா என்னால சரியா வலை உலகப் பக்கம் வரமுடியலங்க:( யார் பதிவையும் சரியா படிக்கவும் நேரம் இல்லை. திங்கள் கிழமை என் உனக்கானவையே கவிதை யூத் விகடன்ல வந்தது கூட தெரியாதுன்னா பாருங்களேன்!!!
விகடன்ல இருந்து மெயில் ஏதோ வந்திருக்க மாதிரி இருக்கேனு செக் பண்ணினா உங்கள் கவிதையை திங்கள் கிழமை அன்று பப்ளிஸ் செய்திருக்கோம்னு இருக்கு:)))))
அடடே இது கூட தெரியாம இருந்திருக்கோமே தெரிந்திருந்தா பக்கத்து வீட்டில் இருக்கும் நாலு நல்லவங்களை அழைச்சிட்டு வந்து காட்டி பெருமைப் பட்டிருக்கலாம்னு ரொம்ப வருத்ததுடன் விகடனைப் பார்த்தால் என் கவிதையை இன்றும் போட்டிருக்காங்க:))))))))
சந்தோசத்தில காலும் ஓட மாட்டேங்குது கையும் ஓட மாட்டேங்குது ஏற்கனவே என்னோட குறுஞ்செய்தி கலாட்டா விகடன்ல வந்திருக்குன்னாலும் என்னோட கவிதை வந்திருப்பது இதுவே முதல் முறை!
நன்றி யூத் விகடன்:)
எல்லாரையும் கூப்பிட்டு காட்டிட்டோம் இல்ல :)
அப்படியே எங்க வீட்டிலும் ஒரு போனப் போட்டு சொல்லலாம்னு போன் செய்தா ”உனக்கு தான் வேற வேலையே இல்லைன்னா எனக்குமா”னு ஒரு இன்ஸெல்ட்:( இதெல்லாம் ஒரு மேட்டரா இது மாதிரி எவ்வளவு முறை கிரேட் இன்ஸெல்ட் எல்லாம் ஆயிருக்கு இதுக்கெல்லாம் நாங்க அசர்ர ஆளு கிடையாது விட்ரா விட்ரா சூனா பானா யாரும் பார்க்கலை மண்ணை துடைச்சுக்கோனு சொல்லிகிட்டே போனை வச்சிட்டோம் இல்ல!! ஹி ஹி...
காணாத உலகம்
-
1.
சிந்தனையுடன் கூடிய குரல்,
அதிகாரமான குரலை விட
வெகுதூரம் பயணிக்கும்.
2.
பூமியின் ஒவ்வொரு மூலையிலும்,
அமைதியான வியப்பில் ஆழ்ந்து நிற்க
ஒரு காரணம் உள்ளத...
1 day ago
