Dec 4, 2008

சொல்லாமலே..



ஏதேதோ நினைத்து வரும் என்னிலிருந்து...

உன்னிடம் வர
எண்ணி எத்தனிக்கும்
கால்கள் இரண்டும்
பின்னோக்கி செல்வதும்,

உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்

உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்

அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..